Tuesday, November 6, 2012

பெண்ணே நீ




ஏ முத்துத் தென்றலே,
என் முத்தக் காதலே...

வாழ்வும் நீயடி,
என் வாழ்கை நீயடி...
வாழ்ந்தோய்ந்து போகையில்,
என் ஆவி நீயடி...

தங்கம் நீயடி,
தேன் அங்கம் உனதடி,
பெண்ணே என்னடி??
என் ஊனும் நீயடி...

தண்ணீர் நீயடி,
என் செந்நீர் நீயடி...
பன்னீராய் ஆகையில்.
என் கண்ணீர் நீயடி...

சத்தம் நீயடி,
என் மொத்தம் உனதடி...
நீ சிப்பியாகையில் - அதில்
முத்து எனதடி...

உன்னால் உருகினேன்,
என்னை உருக்கி ஊற்றினாய்,
ஊற்றும்  வேளையில் - நான்
ஆவியாய் கரைகிறேன்...
ஆவியும் கலந்தது  - அது
மொத்தம் உன்னிடம்.

பார்த்துக்கொள்ளடி,
உன்னுள் நானடி...
உன்னை பார்த்துக்கொள்ளடி,
உன் பாதி நானடி!

Friday, March 9, 2012

நீ வேண்டும்



நீ வேண்டும்,
உன் பிள்ளை மொழி வேண்டும்...

சிணுங்கி சிரிக்கையில் -
சில்லென்று சிலிர்க்கும் ரோமங்களின் உணர்வு வேண்டும்...

உன் பார்வை வேண்டும்,
பார்த்த நொடியில் ஆயிரம் ஆயிரம் -
புரியா மொழி பேசும் உன் விழிகள் வேண்டும்...

கன்னம் வேண்டும்,
கன்னத்தில் இருக்கும் சிறு ரோமங்கள் -
என் மூச்சு காற்றில் ஆடிடல் வேண்டும்...

பற்கள் வேண்டும்,
பாலில் ஊறவைத்த முத்துக்களை கொண்டு -
அடுக்கிய மணியா என்கிற அழகு வேண்டும்...

கூந்தல் வேண்டும்,
கார் மேகங்கள் கரைந்து -
கரு-ஆறுகளாய் ஓடுதலில் மூழ்கிடல் வேண்டும்...

காதுகள் வேண்டும்,
என் மொழி கேட்டு -
என்னை யாரென்று கேட்கும் கேள்விக்குறி வேண்டும்...

தோள் வேண்டும்,
தோல்வியில் சாய்ந்துகொள்ள -
தோழியாய் அது வேண்டும்...

ஈருயிர் - ஓருயிராகி,
புது உயிரொன்று வேண்டும்...

பிள்ளைக் குறும்பின் தொல்லை வேண்டும்,
தொல்லையில் தொலைந்த என்னை -
தட்டி எழுப்ப  உன் கைகள் வேண்டும்...

பாதம் வேண்டும்,
பாதை மாறி போகையில் -
உன் பாதசுச்வடுகள் வழி காட்டிடல் வேண்டும்...

விண்ணும் வேண்டும் - மண்ணும் வேண்டும்,
உன் மூசுச் காற்றுடன் - உடல் சூடும் வேண்டும்,
ஆனந்தக் கண்ணீரும் வேண்டும்...

இன்னும் வேண்டும்,
எல்லாமும் நீயாகவே வேண்டும்...

நீ வேண்டும்...!