Friday, March 9, 2012

நீ வேண்டும்



நீ வேண்டும்,
உன் பிள்ளை மொழி வேண்டும்...

சிணுங்கி சிரிக்கையில் -
சில்லென்று சிலிர்க்கும் ரோமங்களின் உணர்வு வேண்டும்...

உன் பார்வை வேண்டும்,
பார்த்த நொடியில் ஆயிரம் ஆயிரம் -
புரியா மொழி பேசும் உன் விழிகள் வேண்டும்...

கன்னம் வேண்டும்,
கன்னத்தில் இருக்கும் சிறு ரோமங்கள் -
என் மூச்சு காற்றில் ஆடிடல் வேண்டும்...

பற்கள் வேண்டும்,
பாலில் ஊறவைத்த முத்துக்களை கொண்டு -
அடுக்கிய மணியா என்கிற அழகு வேண்டும்...

கூந்தல் வேண்டும்,
கார் மேகங்கள் கரைந்து -
கரு-ஆறுகளாய் ஓடுதலில் மூழ்கிடல் வேண்டும்...

காதுகள் வேண்டும்,
என் மொழி கேட்டு -
என்னை யாரென்று கேட்கும் கேள்விக்குறி வேண்டும்...

தோள் வேண்டும்,
தோல்வியில் சாய்ந்துகொள்ள -
தோழியாய் அது வேண்டும்...

ஈருயிர் - ஓருயிராகி,
புது உயிரொன்று வேண்டும்...

பிள்ளைக் குறும்பின் தொல்லை வேண்டும்,
தொல்லையில் தொலைந்த என்னை -
தட்டி எழுப்ப  உன் கைகள் வேண்டும்...

பாதம் வேண்டும்,
பாதை மாறி போகையில் -
உன் பாதசுச்வடுகள் வழி காட்டிடல் வேண்டும்...

விண்ணும் வேண்டும் - மண்ணும் வேண்டும்,
உன் மூசுச் காற்றுடன் - உடல் சூடும் வேண்டும்,
ஆனந்தக் கண்ணீரும் வேண்டும்...

இன்னும் வேண்டும்,
எல்லாமும் நீயாகவே வேண்டும்...

நீ வேண்டும்...!


2 comments: