Hi, I am a fun loving optimist. I am interested in Writing poetry, Pencil art, Playin Guitar, Traditional Martial arts like Silambam etc... Join my blog and have fun:)
Monday, December 26, 2011
Wednesday, December 21, 2011
அம்மா
என் தலைமுடி களைந்திருப்பதில் கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்பவள் நீ...
வாய் மொழியும் முன்பே
மனதின் முடிசிச்சுகளை அவிழ்ப்பவள் நீ...
என் மனதில் யாரும் இல்லை என்றதும்
கிண்டலாய் சிரித்தாய்...
எப்படி மறந்தேன் நீ உள்ளிருப்பதை...?
உன்னை போல் என்னை நேசிக்க
இன்னொரு பெண் இருப்பது சந்தேகமே..!
நீ இல்லா உலகம் -
நிலவில்லா கிரகம் எனக்கு,
இருந்துவிடு என்னோடு என் இறுதிவரை.
இன்னொரு பிறவி என்று ஒன்றுருப்பின்
மறுமுறை சுமப்பாயா என்னை...?
உன் நிழலில் வாழவே ஆசைப்படுகிறேன்...:)
Tuesday, December 20, 2011
Monday, December 19, 2011
தவிப்பு
நீ என் அருகில் இருக்கும்போது விளையாட்டாய் இருந்தவை,
சிறிது விலகியதும் விஷமாய் ஆனது...
மாறியது நீயே என்றாய்...
மாறியது நான் எனும்போதிலும்
மாற்றியவள் நீயன்றோ...
சிரித்தாய் - சிறகடிக்கிறேன் சிறுபிள்ளைபோல்
உனக்குள் சிறை கொண்டதை அறியாமல்...
கோடி முறை சொல்லியிருப்பேன் எனக்குள்,
உன்னிடம் ஒரு முறை சொல்ல என் உயிர் போகிறது...!
சொல்லிவிடவா...?
எனக்குள்ளேயே மெல்லவா...?
Subscribe to:
Posts (Atom)