Monday, February 8, 2016

போதை



மதுவில்லா போதையிது,
புகையில்லா போதையிது...
இவை கொடுக்கும் போதையினும் பெரிதான போதையிது...

சிவன் கொடுத்த போதையிது,
இவன் குடித்த போதையிது,
கண் திறந்து பார்த்த போதும் பூத்திருந்த போதையிது...

சொட்டு சொட்டாய் கலந்திட்டதோ,
சொட்டுமில்லா கரைகிறதோ,
சொட்ட சொட்ட சொக்கவைக்கும் சொர்க்கம் மிஞ்சும் போதையிது...

மூச்சில் கலந்த போதையிது,
உயிர் மூச்சை எடுக்கும் போதையிது,
காலம் மூன்றும் கடந்து செல்ல கூட்டிச்செல்லும் போதையிது...

மிச்சமில்லா போதையிது,
தலை உச்சிக்கேறும் போதையிது,
உச்சம் அதை உணரத்தூண்டும் இச்சையான போதையிது...

பக்தி தந்த போதையிது,
சக்தியான போதையிது,
முக்தி ஆசை தூண்டவந்த சித்தியான போதையிது...

கலந்திடுமோ காலமெல்லாம்,
கரைந்திடுமா கர்மமெல்லாம்,
காத்திருக்க நேரமில்லை,
கலந்திடவா உன்னோடு - கரைத்திடு வா காற்றோடு
சம்போ மஹாதேவா......

 - வநி

No comments:

Post a Comment