நீ காதலியாக இருந்து மணப்பெண்ணாகும் தருணம் -
நீ கருத்தரிப்பதற்குள் நான் தாயாவது போல் உணர்கிறேன்
சுடிதார் சுட்டிப்பெண்ணாக பார்த்த உன்னை,
சேலையில் நாயகியாக பார்க்க கண்களினோரம் ஈரக்காட்சிகள்,
இதுவரை உணர்ந்தது காதலென்றால்,
இப்பொழுது உணர்வதென்ன? - இது இன்னும்கூட இனிக்கின்றதே!
நீ என் மனைவி ஆவதுதான் திருமணம் என்றால் -
எனக்குள் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பது போன்று உணர்வு?
ஒவ்வொரு ஆணும் தாய்தானோ -
மணப்பந்தலில் தன்னவள் கைப்பிடிக்கும்பொழுது.
ஏற்றுக்கொள்வதின் சுகம் இதுதானென்றால்
ஒருமுறை போதாது இந்த திருமணம் நம்வாழ்வில்.
திருநாளை எண்ணி காத்திருக்கிறேன்,
உன் பிஞ்சுப்பாதங்கள் என் வாசற்படி தாண்டி உள்விழைய!
அன்புடன்,
வநி
Super machi... Congrats dear
ReplyDelete