Wednesday, December 21, 2011

அம்மா


என் தலைமுடி களைந்திருப்பதில் கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்பவள் நீ...

வாய் மொழியும் முன்பே 
மனதின் முடிசிச்சுகளை அவிழ்ப்பவள் நீ...

என் மனதில் யாரும் இல்லை என்றதும் 
கிண்டலாய் சிரித்தாய்...
எப்படி மறந்தேன் நீ உள்ளிருப்பதை...?

உன்னை போல் என்னை நேசிக்க 
இன்னொரு பெண் இருப்பது சந்தேகமே..!

நீ இல்லா உலகம் - 
நிலவில்லா கிரகம் எனக்கு,
இருந்துவிடு என்னோடு என் இறுதிவரை.

இன்னொரு பிறவி என்று ஒன்றுருப்பின் 
மறுமுறை சுமப்பாயா என்னை...?

உன் நிழலில் வாழவே ஆசைப்படுகிறேன்...:)

No comments:

Post a Comment