நீ என் அருகில் இருக்கும்போது விளையாட்டாய் இருந்தவை,
சிறிது விலகியதும் விஷமாய் ஆனது...
மாறியது நீயே என்றாய்...
மாறியது நான் எனும்போதிலும்
மாற்றியவள் நீயன்றோ...
சிரித்தாய் - சிறகடிக்கிறேன் சிறுபிள்ளைபோல்
உனக்குள் சிறை கொண்டதை அறியாமல்...
கோடி முறை சொல்லியிருப்பேன் எனக்குள்,
உன்னிடம் ஒரு முறை சொல்ல என் உயிர் போகிறது...!
சொல்லிவிடவா...?
எனக்குள்ளேயே மெல்லவா...?

No comments:
Post a Comment